தக்கலை மறைமாவட்ட சீரோ மலபார் இளையோர் இயக்கத்தின் மறைமாவட்ட நடுவண்செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வர்களுக்கான பயிற்சி 2023 மார்ச் 14 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கல்லுவிளை SMYM  அலுவலகத்தில் தூய ஆவி பாடலுடன் ஆரம்பமானது. தக்கலை மறைமாவட்ட SMYM துணை தலைவர் அஞ்சனா அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.  திருச்சி டோன் போஸ்கோ வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜா அவர்கள் இந்நிகழ்வை வழிநடத்தினார். மாணவர்கள் முன் எப்படி பேச வேண்டும் என்பதை குறித்து விளக்கி கூறினார். மாணவர்களின் திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பை பெற அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்பதையும், மாணவர்களின் இயல்பை புரிந்து அவர்களின் இயல்புக்கேற்றவாறு எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ள படிப்புகளை வழங்க வேண்டும் என்பதை பற்றியும் கூறினார். பின்னர் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள படிப்புகளை பற்றியும் அந்த துறைகளில் எவ்வாறு படித்தால் வேலை கிடைக்கும் என்பதை பற்றியும் அதைப் படிப்பதற்கு தகுந்த கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது பற்றியும் சிறந்த முறையில் விளக்கினார்.

மதியம் 2 மணியளவில் தக்கலை மறை மாவட்ட SMYM இயக்குனர் அருட்தந்தை ஜோசப் சந்தோஷ் அவர்கள் தன்னார்வலர்களுக்கு இளையோர் மறைக்கல்வி குறித்த வகுப்பு நடத்தினார். தன்னார்வலர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். தக்கலை மறைமாவட்ட SMYM செயலர் மெரின் சுஜித் அனைவருக்கும் நன்றி கூறினார். இதில் மொத்தம் 10 பேர் கலந்து கொண்டனர். இயக்குநர் தந்தையின் இறுதி ஆசியுடன் சுமார் 4 மணியளவில் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

Post a Comment

0 Comments