மஞ்சாலுமூடு மறைவட்ட இளையோர் சந்திப்பு


சீ
ரோ மலபார் இளையோர் இயக்கத்தின் மஞ்சாலுமூடு மறைவட்ட இளையோர் சந்திப்பு நிகழ்ச்சி 2022 அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. மஞ்சாலுமூடு மறைவட்ட ஆலய வளாகத்தில் மதியம் 1:30 மணிக்கு பெயர் பதிவுடன் ஆரம்பமானது. தொடர்ந்து 2 மணியளவில் முக்கூட்டுக்கல் ஆலய இளையோர்கள் இறைவணக்கம் பாடினர். முழுக்கோடு இளையோர் இயக்க உறுப்பினர் அகிலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார் தொடர்ந்து மஞ்சாலுமூடு மறைவட்ட இயக்குனர் அருட்தந்தை ரோபின் ஜோஸ் அவர்கள் தொடக்கஉரையாற்றினார். மஞ்சாலுமூடு ஆலய பங்குதந்தை பேரருட்தந்தை அகஸ்டின் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜோசப் சந்தோஷ் அவர்கள் “இளையோர் மனதில் இயேசு” என்ற தலைப்பில் இளையோர்களின் விசுவாச வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வகுப்புகள் நடத்தினார். மறைமாவட்ட துணைத்தலைவர் ஜாஸ்மின் இளையோரின் வாழ்க்கையில் நம்பிக்கையின் அவசியம்என்ற  கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதை தொடர்ந்து அவர்கள் மறைமாவட்ட பொருளாளர் அஜித் “இன்றைய சமூகத்தில் இளையோர்கள்” என்ற தலைப்பில் மிகவும் கலகலப்பான முறையில் விவாதம் நடத்தினார். அதை தொடர்ந்து மறைமாவட்ட செயற்குழு ஆலோசகர் ஜெசின் “தற்போதைய சமூகத்தில் வேலை வாய்ப்புகள்” என்ற தலைப்பில் வேலையின்மை பற்றியும் அதை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும், சமூகத்தில் உள்ள வேலைகளை  எவ்வாறு கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும் என்பதை குறித்து வகுப்புகள் நடத்தினார். இடையில் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அனைவருக்கும் ஒவ்வொரு தலைப்புகள் வழங்கப்பட்டு அதை பற்றிய கலந்தாய்வுகளும் நடைபெற்றது. இடையிடையே விளையாட்டுக்கள் மற்றும் சிறு நடனங்கள் மூலம் வகுப்பு அனைத்து சிறந்த முறையில் நடைபெற வழிவகுத்தது.  கடைசியில் மறைமாவட்ட செயலர் மெரின் சுஜித் அனைவருக்கும் நன்றி கூறினார். பின் இயக்க கீதத்துடன் நிகழ்சிகள் நிறைவடைந்தது. மறைமாவட்ட பொறுப்பாளர்கள் நிகழ்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை மஞ்சாலுமூடு மறைவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். அதேபோன்று மஞ்சாலுமூடு மறைவட்டத்தை சார்ந்த அலகு ஊக்குவிப்பாளர்கள் நிகழ்ச்சியின் உடன் இருந்து தேவையான உதவிகளைச் செய்திருந்தார்.

Post a Comment

0 Comments