மதுரை மறைபரப்புதள சந்திப்பு

 


மதுரை மறைபரப்புதள சந்திப்பு மற்றும் மறைமாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

தக்கலை மறைமாவட்ட சீரோ மலபார் இளையோர் இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் சுற்றுப்பயணம் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் மதுரை திருத்தொண்டுதள வளாகசத்தில் 2022 அக்டோபர் 24 திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 10 மணியளவில் மதுரை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மதுரை திருத்தொண்டுதளம் பார்வையிடப்பட்டது, மதுரை திருத்தொண்டுதள ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஜெபனேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார், அருட்சகோதரி அவர்கள் மதுரை மிஷன் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். மதியம் 2 மணிக்கு SMYM மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை ஜோசப் சந்தோஷ் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது. இதில் முக்கியமாக எடுக்கப்ட்ட தீர்மானங்கள்

1.   மறைமாவட்ட அளவில் நடைபெற்று வருகின்ற அலகு சந்திப்பு நிகழ்ச்சிகளில் பொறுப்பாளர்கள் முழுமனதுடன் சிறப்பாக செயல்பட வேண்டும்

2.   வருகின்ற டிசம்பர் மாதம் படந்தாலுமூடு மறைவட்டம் தலைமையில் நடைபெறுகின்ற கிறிஸ்துமஸ் போட்டிகளில் அனைத்து இளையோர்களையும் பங்குபெற செய்யவேண்டும்.

3.   Jesus Dreamz இசைக்குழுவை மேலும் விரிவுபடுத்தி அதிகமான இளையோர்களை பங்குபெற செய்ய வேண்டும்.

4.   அடுத்த வருடத்திற்கான (2023) வருடாந்திர திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடைசியாக மறைமாவட்ட தலைவர் மெர்பின் அனைவருக்கும் நன்றி கூறினார். இறுதியில் அனைவருக்கும் தேநீர் வழங்கபட்டது. பின்னர் வாடிபட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments