நித்திரவிளை மறைவட்ட இளையோர் சந்திப்பு


சீ
ரோ மலபார் இளையோர் இயக்கத்தின் நித்திரவிளை மறைவட்ட இளையோர் சந்திப்பு நிகழ்ச்சி
2022 அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. நித்திரவிளை மறைவட்ட ஆலய வளாகத்தில் மதியம் 1:30 மணிக்கு பெயர் பதிவுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து 2 மணியளவில் சீனிவிளை ஆலய இளையோர்கள் இறைவணக்கம் பாடினர். மறைமாவட்ட தலைவர் மெர்பின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் தொடர்ந்து நித்திரவிளை மறைவட்ட இயக்குனர் அருட்தந்தை றோபினஸ் அவர்கள் தொடக்க உரையாற்றினார். நித்திரவிளை ஆலய பங்குதந்தை பேரருத்தந்தை ஜோஸ் முட்டத்துபாடம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜோசப் சந்தோஷ் அவர்கள் “இளையோர் மனதில் இயேசு” என்ற தலைப்பில் இளையோர்களின் விசுவாச வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வகுப்புகள் நடத்தினார். அதை தொடர்ந்து மறைமாவட்ட இணைதலைவர் அஞ்சனா அவர்கள் “இன்றைய சமூகத்தில் இளையோர்கள்” என்ற தலைப்பில் மிகவும் கலகலப்பான முறையில் விவாதம் நடத்தினார். அதை தொடர்ந்து மறைமாவட்ட பொருளாளர் அஜித் “தற்போதைய சமூகத்தில் வேலை வாய்ப்புகள்” என்ற தலைப்பில் வேலையின்மை பற்றியும் அதை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும், சமூகத்தில் உள்ள வேலைகளை  எவ்வாறு கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும் என்பதை குறித்து வகுப்புகள் நடத்தினார். இடையில் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அனைவருக்கும் ஒவ்வொரு தலைப்புகள் வழங்கப்பட்டு அதை பற்றிய கலந்தாய்வுகளும் நடைபெற்றது. இடையிடையே நடந்த விளையாட்டுக்கள் வகுப்பு அனைத்து சிறந்த  முறையில் நடைபெற வழிவகுத்தது. பின்னர் திருமதி.வெளிச்சம் ஷெறின் அவர்கள் கலந்து கொண்டு தற்போது சமுதாயத்தில் நடைபெறுகின்ற தீமைகள் குறித்தும், நம்முடைய உடலிலும் மனதளவிலும் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறித்தும் சிறந்த முறையில் வகுப்புகள் நடத்தினார். இறுதியில் முஞ்சிறை பங்கை சார்ந்த SMYM உறுப்பினர் மனோஜ் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். பின் இயக்க கீதத்துடன் நிகழ்சிகள் நிறைவடைந்தது. மறைமாவட்ட பொறுப்பாளர்கள் நிகழ்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.  இந்நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை நித்திரவிளை ஆலய SMYM உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments