பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி முகாம். கார்மல் மாதா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் கன்னியாகுமரி

 

 TYES - Augest 5,2022

2022, ஆகஸ்ட் மாதம்  4 தேதி  கார்மல்மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. காலை 10 மணி அளவில் தக்கலை மறைமாவட்டத்தின் இளைஞர் இயக்க இயக்குனர் தந்தை ஜோசப் சந்தோஷ் மற்றும் TYES ஒருங்கிணைப்பாளர் ஸ்டார்வின் அவர்களால் வழிநடத்தப்பட்டது. காலை 10 மணி அளவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் மதியம் 1:30 மணி அளவில் 8 மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பும் நடைபெற்றது. இதில் முக்கியமாக மாணவர்களுக்கு அலைபேசியின் தீமைகள் பற்றியும் மேலும் சமூகத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதைப்பற்றியும் வகுப்பு நடத்தினார். ஸ்டார்வின் அவர்கள் சிறு நடனம் மற்றும் விளையாட்டுகள் நடத்தி மாணவர்களை உற்சாகமுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வழிவகை செய்தார். வகுப்பிற்க்கு தேவையான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.



Post a Comment

0 Comments